முகப்பு
இந்தியா

கேரள முதல்வர் நியமனத்தில் நீடிக்கும் இழுபறி! காங்கிரஸுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

கேரளத்தில் முதல்வர் நியமனம் தொடர்பாக காங்கிரஸுக்கு எதிராக பல்வேறு இடங்களில் விமர்சன வாசகங்கள்

காங்கிரஸுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள விமர்சன வாசகங்கள்
பகிர்:

கேரளத்தில் முதல்வர் நியமனம் தொடர்பாக காங்கிரஸுக்கு எதிராக பல்வேறு இடங்களில் விமர்சன வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிபெற்ற நிலையில், புதிய முதல்வர் குறித்து காங்கிரஸில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முதல்வர் போட்டியில் காங்கிரஸின் 3 மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவியதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி 9 நாள்களான நிலையில், இன்னும் மாநிலத்தில் முதல்வர் நியமிக்கப்படவில்லை என காங்கிரஸுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின.

Advertisement

இதனிடையே, முதல்வர் நியமனத்தில் நீடிக்கும் இழுபறி குறித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸுக்கு எதிரான வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ராகுலும் பிரியங்காவும் வயநாட்டை மறந்து விட்டனர், அவர்களால் இங்கு மீண்டும் வெற்றிபெற முடியாது.

கேரள மக்கள் ஒருபோதும் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.

ராகுல் மற்றும் பிரியங்கா இது ஒரு எச்சரிக்கை அல்ல, இந்தத் தவறுக்கு கேரளம் ஒருபோதும் உங்களை மன்னிக்காது என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை காங்கிரஸ் அலுவலகங்கள் இருக்கும் பகுதிகளிலும் ஒட்டியுள்ளனர்.

இதனிடையே, முதல்வர் அறிவிப்பு இன்று வெளியாகவிருந்ததாகவும், சோனியா காந்தி மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதால் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டதாகவும் மாநில காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப் இன்று கூறினார்.

summary

Appointment of Keralam Chief Minister; Opposition to Congress Intensifies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.