முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் மாணவர்கள் சாலைமறியல்

திருநெல்வேலி, டிச.6: திருநெல்வேலியில், நெல்லை- மதுரை சாலையில் பள்ளி மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் +1 வகுப்பு படித்தவர் பேட்டையைச் சேர்ந்த மைமூன் ஷர்மிளா ( வயது 17

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:20 PM
பகிர்:

திருநெல்வேலி, டிச.6: திருநெல்வேலியில், நெல்லை- மதுரை சாலையில் பள்ளி மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் +1 வகுப்பு படித்தவர் பேட்டையைச் சேர்ந்த மைமூன் ஷர்மிளா ( வயது 17 ). நேற்று மாலை வீடு திரும்பியபோது, கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு வேகமாகச் சென்றது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவர் உயிர் இழந்தார்.  

இதுகுறித்த புகார் போலீஸில் பதிவுசெய்யப்பட்டது. விபத்துக்குக் காரணமான வாகனத்தை போலீஸார் கைப்பற்றினர். இருப்பினும் இது தொடர்பாக யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த சக மாணவ மாணவிகள், உடனடி நடவடிக்கை கோரி இன்று காலையில் நெல்லை - மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக முக்கியச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.