முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி - வேன் மோதல் ஒருவர் பலி, 22 பேர் படுகாயம்.

ஸ்ரீபெரும்புதூர்,  அக்  3: ஒரகடம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் மோதியதில் பெண் ஒருவர் பலியானார். 22 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:42 PM
பகிர்:

ஸ்ரீபெரும்புதூர்,  அக்  3: ஒரகடம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் மோதியதில் பெண் ஒருவர் பலியானார். 22 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், எழுச்சூர் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 25 பெண் தொழிலாளர்கள் படப்பை பகுதியில் உள்ள தனியார் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வேன் மூலமாக வேலைக்குச் சென்று வருவது வழக்கம். அதே போல் திங்கள்கிழமை விடியற்காலையில்  25 பெண் தொழிலாளர்கள் வேலைக்கு வேனில் வந்து கொண்டிருந்துள்ளனர். வேன் வண்டலூர் வாலாஜாபாத் சாலை வழியாக ஒரகடம் பகுதியில் வந்தபோது சாலை ஓரமாக நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது இதில் பலத்த காயம் அடைந்த உள்ளாவூர் பகுதியைச் சேர்ந்த அம்மு(20) சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் கொங்கனாஞ்சேரி பகுதியை சேர்ந்த பிரேமா(25), அனிதா(27),அருள்மணி(30), பார்வதி உள்ளிட்ட 22 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் எட்டுபேர் குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், 14 பேர் படப்பை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து ஒரகடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →