முகப்பு
தற்போதைய செய்திகள்

சீர்காழியில் நகை வியாபாரியிடம் 12.5 கிலோ தங்கம் கொள்ளை

மயிலாடுதுறை, செப்.28: சீர்காழியில் நகை வியாபாரியிடம் இருந்து 12.5 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார் பவன் குமார் ஜெயின். இவர் ஒரு தங்க

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:38 PM
பகிர்:

மயிலாடுதுறை, செப்.28: சீர்காழியில் நகை வியாபாரியிடம் இருந்து 12.5 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார் பவன் குமார் ஜெயின். இவர் ஒரு தங்க வியாபாரி. இவர் நேற்று இரவு சீர்காழி அருகே பைபாஸ் சாலையில் கார் ஓட்டியபடி சென்றபோது, பாதரக்குடி என்ற இடத்தில் இவரைப் பிந்தொடர்ந்து இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் 4 பேர், இவரது காரை நிறுத்தியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து 12.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டனராம். இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் நடந்துள்ளது. போலீஸார் வழக்கு பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →