தூத்துக்குடி அருகே தனியார் அனல்மின்நிலையத்தில் தீ: 4 பேர் பலி
தூத்துக்குடி, ஆக.14: தூத்துக்குடிக்கு அருகே புதூர் பாளையத்தில் உள்ள தனியார் அனல் மின்நிலையத்தில் இன்று மதியம் 1 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. நிலக்கரியைக் கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் பற்றி
தூத்துக்குடி, ஆக.14: தூத்துக்குடிக்கு அருகே புதூர் பாளையத்தில் உள்ள தனியார் அனல் மின்நிலையத்தில் இன்று மதியம் 1 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது.
நிலக்கரியைக் கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் பற்றிய தீ, மளமளவெனப் பற்றி எரிந்தது. இதில் அங்கே பணியில் இருந்த 4 ஊழியர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.