மதுரை அருகே பழிக்குப் பழியாக இளைஞர் படுகொலை
திருப்பரங்குன்றம், ஆக.17: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரில் இளைஞர் ஒருவர் இன்று காலை 10.30மணி அளவில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ரமேஷ் என்ற இளைஞர் பழி
திருப்பரங்குன்றம், ஆக.17: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரில் இளைஞர் ஒருவர் இன்று காலை 10.30மணி அளவில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ரமேஷ் என்ற இளைஞர் பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர்.
மனோகரன், பூமிநாதன், ரமேஷ், பொட்டுப்பாண்டி என கல்லூரி மாணவ நண்பர்கள் சிலருக்கிடையே எழுந்த தகராறில் மனோகரன் கடந்த ஜூன் 11ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் 4 பேர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் ஆஜராகி வருகின்றனராம். இன்று இந்த வழக்கு தொடர்பாக அவனியாபுரம் வந்து திரும்பும்போது, 4 பேர் மீது ஒரு கும்பல் அரிவாள் கொண்டு தாக்கியுள்ளனர். இதில், ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பூமிநாதன், பொட்டுப்பாண்டி இருவரும் கவலைக்கு இடமான நிலையில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றானர்.