காரைக்காலில் பாஜக ரயில் மறியல்
காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரைப் பெற்றுத் தர முயற்சி எடுக்காத மத்திய அமைச்சர் நாராயணசாமியைக் கண்டித்தும், அவர் பதவி விலகக் கோரியும், சில்லறை வர்த்தகத்தில் நேரடி
காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரைப் பெற்றுத் தர முயற்சி எடுக்காத மத்திய அமைச்சர் நாராயணசாமியைக் கண்டித்தும், அவர் பதவி விலகக் கோரியும், சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும் புதுவை மாநில பாஜக சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
புதுவை மாநில பாஜக விவசாய அணித்தலைவர் எஸ்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில், காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் மறித்து போராட்டம் நடத்திய 75 பேர் கைது செய்யப்பட்டனர்.