முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகை அருகே பூமிக்கடியில் இருந்து உலோகச் சிலை கண்டெடுப்பு

நாகப்பட்டினம் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, அங்கிருந்து சுவாமிகளின் உலோகச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:50 PM
பகிர்:

நாகப்பட்டினம் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, அங்கிருந்து சுவாமிகளின் உலோகச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

நாகப்பட்டினம் அருகே வடக்குபொய்கைநல்லூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சித்தானந்தம். இவரது வீட்டுத் தோட்டத்தில், புதிய வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது, பூமிக்கடியில் இருந்து உலோகச் சிலைகள் சில கண்டெடுக்கப்பட்டன. ஒன்றரை அடி உயரம் உள்ள வள்ளி சிலை, ஒரு அடி உயரமுள்ள விநாயகர் சிலை, ஒன்றரை அடி உயரமுள்ள அஸ்திரதேவர் சிலை, சுவாமி சிலைகளுக்குப் பின்னுள்ள ஒரு அடி உயர பிரபை (திருவாசி) ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அவற்றைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →