விருதுநகரில் அரசுப் பேருந்து விபத்து : ஓட்டுநர் பலி
விருதுநகரில் அரசுப் பேருந்து ஒன்று பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் பலியானார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:21 AM
விருதுநகரில் அரசுப் பேருந்து ஒன்று பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் பலியானார்.
சென்னையில் இருந்து கன்னியாக்குமரி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று விருதுநகர் மாவட்டம் எட்டூருவட்டம் பகுதியில் ஆற்றுப் பாலத்தைக் கடந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். 8 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வச்சாரக்காரப்பட்டி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.