முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே டாஸ்மாக் கடையில் திருட்டு

விருதுநகர் மாவட்டம் கன்னிச்சேரிபுதூரில் டாஸ்மாக் கடையில் 1.45 லட்சம் திருட்டுப்போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 டிசம்பர், 2012 at 12:22 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:21 AM

விருதுநகர் மாவட்டம் கன்னிச்சேரிபுதூரில் டாஸ்மாக் கடையில் 1.45 லட்சம் திருட்டுப்போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கன்னிச்சேரிபுதூரில் உள்ள டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் பாண்டியர்ஜன், வச்சாரக்காரப்பட்டி போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், நேற்று இரவு டாஸ்மாக் கடையில் வசூலானப் பணம் 1.45 லட்சத்தை கடைக்குள் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டதாகவும், இன்று காலை கடையைத் திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, பணம் கொள்ளை போய் இருப்பதாகவும் கூறியுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.