முகப்பு
தற்போதைய செய்திகள்

புளியோதரை பிரசாதம் சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி மயக்கம்

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகில் வாய்மேடு என்ற பகுதியைச் சேர்ந்த அம்மாக்கட்டளையில் கடந்த டிச.9ம் தேதி ஞாயிறு இரவு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன. தொடர்ந்து,

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகில் வாய்மேடு என்ற பகுதியைச் சேர்ந்த அம்மாக்கட்டளையில் கடந்த டிச.9ம் தேதி ஞாயிறு இரவு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன. தொடர்ந்து, அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இந்த பிரசாதத்தைச் சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று காலை அவர்களை மாவட்ட ஆட்சியர் முனுசாமி, வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், வாய்மேடு பகுதி ஊராட்சித் தலைவர், வேதாரண்யம் தாலுகா அலுவலர் புண்ணியகோடி உள்ளிட்டோர் சென்று பார்த்து, விசாரணை செய்து, ஆறுதல் கூறினர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →