முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கைது

விருதுநகரில் ரேஷன் அரிசியைக் கடத்தி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 11 டிசம்பர், 2012 at 1:18 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:22 AM

விருதுநகரில் ரேஷன் அரிசியைக் கடத்தி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அத்திக்குளம் மற்றும் ராமலிங்காபுரம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து அரிசியை கடத்தி அருப்புக்கோட்டைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், சிவகாசி சாலையில், உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினர் நடத்திய வாகனச் சோதனையில், அந்த வாகனத்தில் 50 கிலோ மூட்டைகள் 20 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்தவர், மூட்டைகளை ஏற்றியவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் தப்பியோடிவிட்டனர். தப்பியோடிவர்கள், அரிசி ஆலை உரிமையாளர் ஒருவரும், ரேஷன் கடை விற்பனையாளர் இருவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.