முகப்பு
தற்போதைய செய்திகள்

துரைதயாநிதிக்கு துணையாக மேலூருக்கு வந்த மு.க. அழகிரி

கிரானைட் வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த துரை தயாநிதிக்கு துணையாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர் மு.க. அழகிரி மேலூருக்கு வந்தார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:54 PM
பகிர்:

கிரானைட் வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த துரை தயாநிதிக்கு துணையாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர் மு.க. அழகிரி மேலூருக்கு வந்தார்.

மதுரைக் கிளை நீதிமன்றம் துரைதயாநிதிக்கு முன் ஜாமீன் வழங்கியதை அடுத்து, இன்று மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி, ஜாமீன் நகலைப் பெற்றுக் கொண்டார்.மேலும், துரை தயாநிதியின் பாஸ்போர்ட்டை அவரது வழக்குரைஞர் மோகன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்த துரை தயாநிதிக்குத் துணையாக அவரது தந்தையும், நாடாளுமன்ற உறுப்பினருமான மு.க. அழகிரியும் மேலூருக்கு வந்துள்ளார்.

மேலூருக்கு வெளியே அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி அலுவலகத்தில் அழகிரி காத்திருந்தார். இது மட்டுமல்லாமல், துரை தயாநிதியுடன், 20க்கும் மேற்பட்ட கார்களில் திமுகவினர் அப்பகுதியில் குவிந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →