இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 27 தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 27 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கையில் கைதான தமிழக மீனவர்கள் 27 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 21ம் தேதி நாகை பகுதியில் இருந்து 14 பேரும், காரைக்கால் மாவட்டத்தில் இருந்து 13 பேரும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் ஞாயிறு அன்று இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இன்று நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப் பட்டனர். இந்நிலையில், அவர்கள் 27 பேரையும் விடுதலை செய்து திரிகோணமலை நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை அடுத்து அவர்கள் ஓரிரு நாளில் கரை திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.