முகப்பு
தற்போதைய செய்திகள்

அறந்தாங்கியில் மூதாட்டியிடம் 7 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு

அறந்தாங்கி வாடியன் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் செட்டியார் மனைவி கஸ்தூரி(74), சுந்தரம் செட்டியார் இறந்துவிட்டார் மகள் விஜயலெட்சுமி, மருமகன் தமிழ்ச்செல்வனுடன் வசித்து

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

 அறந்தாங்கியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்க செயின் மூதாட்டியிடம் திருடப்பட்டது.

அறந்தாங்கி வாடியன் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் செட்டியார் மனைவி கஸ்தூரி(74), சுந்தரம் செட்டியார் இறந்துவிட்டார் மகள் விஜயலெட்சுமி, மருமகன் தமிழ்ச்செல்வனுடன் வசித்துவருகிறார்.

வெள்ளிக்கிழமை காலை 4.30 மணியளவில் வீட்டிலிருந்த குப்பையை தெருமுனையில் கொட்டிவிட்டு வீட்டிற்கு கஸ்தூரி திரும்ப வருகையில் பின்புறமாக வாயை பொத்திக் கொண்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் தங்க செயின் மற்றும் அதனுடன் இணைந்திருந்த  ஐந்து பவுன் வைர டாலர் ஆக ரூ. 7லட்சம் மதிப்புள்ள நகையை அறுத்துக்கொண்டு இரு சக்கர மோட்டார் வாகனத்தில் மர்ம மனிதர்கள் தப்பிவிட்டார்கள்.

அறந்தாங்கி காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.