முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை திருமங்கலம் அருகே பஸ்-வேன் மோதல்: 5 பேர் பலி

திருப்பரங்குன்றம், பிப்.20: மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சம்பக்குளம் - கருவேலம்பட்டி விலக்கில் பஸ்ஸும் ஆம்னி வேனும் மோதியதில் 5 பேர் பலியாயினர். மதுரையில் இருந்து விருதுநகர் நோக்கிச் சென்ற தனிய

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:45 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 9:46 PM

திருப்பரங்குன்றம், பிப்.20: மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சம்பக்குளம் - கருவேலம்பட்டி விலக்கில் பஸ்ஸும் ஆம்னி வேனும் மோதியதில் 5 பேர் பலியாயினர்.

மதுரையில் இருந்து விருதுநகர் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸும், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆம்னி வேனும் கருவேலம்பட்டி ரிங்ரோடு அருகே இன்று காலை நேரத்தில் நேருக்கு நேராக மோதின. இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த ஒருவர் மதுரை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.