முகப்பு
தற்போதைய செய்திகள்

அம்பையில் கடசல் தொழிலாளி மர்மச் சாவு

அம்பாசமுத்திரம், ஜூலை 14: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் மர்மமான முறையில் தொழிலாளி இறந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பொத்தையை ச

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

அம்பாசமுத்திரம், ஜூலை 14: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் மர்மமான முறையில் தொழிலாளி இறந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பொத்தையை சேர்ந்த சொர்ணம் மகன் ஐயப்பன் (35). கடசல் தொழிலாளியான இவர் சனிக்கிழமை அதிகாலை வீட்டில் வலது கண்ணில் ரத்தம் கசிந்த நிலையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியவில்லை.

தகவலறிந்த அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சி. சுரேஷ்குமார் ஐயப்பன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதில் ஐயப்பன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →