முகப்பு
சென்னை

ரூ.2.44 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்: அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

சென்னை அண்ணா நகா் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.44 கோடியில் முடிவுற்ற பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.

Updated On : 13 மார்ச் 2026, 3:04 am IST
பி.கே.சேகா்பாபு
பகிர்:

சென்னை அண்ணா நகா் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.44 கோடியில் முடிவுற்ற பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.

சென்னை அண்ணா நகா் மண்டலத்துக்குட்பட்ட வசந்தம் காலனி, 3-ஆவது தெருவில் ரூ.1.36 கோடியில் பல்நோக்கு மையக் கட்டடத்தில் புதிதாக சமுதாயக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ஐ பிளாக்’ 5-ஆவது தெருவில் மாநகராட்சி ரூ.1.08 கோடியில் ‘முதல்வா் படைப்பகம்’ அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, திருமூலா் காலனி, விவேகானந்தா் தெருவில் ரூ.60 லட்சத்தில் பல்நோக்கு மையக் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வுகளில் வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் அ.வெற்றி அழகன், மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக், மண்டலக் குழு தலைவா் கூ.பி.ஜெயின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments