விஷக் காய்ச்சலால் சிறுவன் பலி : பொள்ளாச்சியில் சாலை மறியல்
பொள்ளாச்சி, ஜூலை 19 : பொள்ளாச்சி அருகே மீன்கரை சாலையில் குடிநீர் சுகாதார சீர்கேட்டைக் கண்டித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நேற்று இரவு ஒரு சிறுவன் விஷக் காய்ச்சலுக்கு பலிய
பொள்ளாச்சி, ஜூலை 19 : பொள்ளாச்சி அருகே மீன்கரை சாலையில் குடிநீர் சுகாதார சீர்கேட்டைக் கண்டித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நேற்று இரவு ஒரு சிறுவன் விஷக் காய்ச்சலுக்கு பலியானதைத் தொடர்ந்து கோபமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குறை கூறினர். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.