மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த திமுகவினர் கைது
சேலம், ஜூலை 27 : சேலம் அங்கம்மாள் காலனியில் பாதிக்கப்பட்ட மக்கள் இருதினங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியரை சந்தத்து வீரபாண்டி ஆறுமுகத்தால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மனு கொடுத்தனர். அந்த மனுவில்,
தற்போதைய செய்திகள்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த திமுகவினர் கைது
சேலம், ஜூலை 27 : சேலம் அங்கம்மாள் காலனியில் பாதிக்கப்பட்ட மக்கள் இருதினங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியரை சந்தத்து வீரபாண்டி ஆறுமுகத்தால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மனு கொடுத்தனர். அந்த மனுவில்,
சேலம், ஜூலை 27 : சேலம் அங்கம்மாள் காலனியில் பாதிக்கப்பட்ட மக்கள் இருதினங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியரை சந்தத்து வீரபாண்டி ஆறுமுகத்தால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மனு கொடுத்தனர். அந்த மனுவில், இன்னும் வீரபாண்டி ஆறுமுகம் மூலமான அச்சுறுத்தல் நீங்கவில்லை என்பதால் அவரை சேலம் மாவட்டத்துக்குள் அனுமதிக்க கூடாது என்றும், பாதிக்கப்பட்ட தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
அதற்கு பதிலாக, திமுகவினர் இன்று வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஆதரவாக அவரை சேலம் மாவட்டத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று மனு கொடுப்பதாக அறிவித்திருந்தனர்.மேலும், இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து மனு கொடுப்பதாக இருந்தனர். தகவல் அறிந்த போலிஸார் மனு கொடுக்க வந்த 33 திமுகவினரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் முன்னரே கைது செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.