நில அளவைக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்: களக்காடு அருகே சர்வேயர் கைது
களக்காடு, மார்ச் 7: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தைச் சார்ந்த சர்வேயர் ஷெனான்ஷியஸ் (வயது 57) என்பவர், நில அளவை தொடர்பாக தொடர்புடைய நபரிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள
களக்காடு, மார்ச் 7: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தைச் சார்ந்த சர்வேயர் ஷெனான்ஷியஸ் (வயது 57) என்பவர், நில அளவை தொடர்பாக தொடர்புடைய நபரிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதன்படி, நாங்குநேரி அருகே களக்காட்டில் ரூ. 6 ஆயிரத்தை அந்த நபர் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஷெனான்ஷியஸை கைது செய்தனர்.
இவர் நாகர்கோயிலைச் சேர்ந்தவர். நாங்குநேரி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.