சப்பரம் தூக்கும்போது மின்சாரம் தாக்கி 3 பேர் பலி
விருதுநகர், மே 9: விருதுநகர் அருகே தென்னல்குடி கிராமத்தில் பெருமாள் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் சப்பரம் தூக்கிக் கொண்டு வரும்போது, சப்பரத்தின் மேல் பொருத்தப்பட்டி
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:46 PM
விருதுநகர், மே 9: விருதுநகர் அருகே தென்னல்குடி கிராமத்தில் பெருமாள் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் சப்பரம் தூக்கிக் கொண்டு வரும்போது, சப்பரத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த கலசம் மின்சார கம்பியில் உரசியதில் தீப்பிடித்தது. இதில், சப்பரம் தூக்கிச் சென்ற மாரீஸ்வரன், முத்துச்செல்வன், கார்மேகம் ஆகிய மூவர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் விருதுநகர் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டன. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.