முகப்பு
தற்போதைய செய்திகள்

காசு வைத்து சூதாடிய 7 பேர் கைது: ரொக்கம் ரூ.45 ஆயிரம் பறிமுதல்

சிதம்பரத்தில் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:

சிதம்பரத்தில் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேரை நகர போலீஸார்  கைது செய்தனர்

சிதம்பரம் வேணுகோபால் தெருவில் உள்ள தனியார் விடுதியில் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக நகர போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கொத்தங்குடியை சேர்ந்த வனராஐன் (30), அண்ணாமலைநகரை சேர்ந்த தங்கமணி(25), வடக்குதில்லைநாயகபுரத்தை சேர்ந்த முகுந்தன்(30), கோபு(32), மீனவர் காலணியை சேர்ந்த உதயகோபி(31), சிதம்பரம் வண்டிகேட்டை சேர்ந்த நடராஐன்(37), வடக்கு வடுகத் தெருவைச் சேர்ந்த பாலு(41) ஆகியோரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து ரு.45 ஆயிரம் பணம் மற்றும் சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.