முகப்பு
தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது

சிதம்பரம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபரை சிதம்பரம் அனைத்து மகளிர் போலிஸார் சனிக்கிழமை

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:

சிதம்பரம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபரை சிதம்பரம் அனைத்து மகளிர் போலிஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள பு.கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் என்பவரது மகள் சுந்தரவள்ளி(13).  இவர் மருதூரில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரது மகன் ராஜாமணி(30) பாலியல் பலாத்காரம் செய்தததால் தற்போது அம்மாணவி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து மாணவி சுந்தரவள்ளி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வாலிபர் ராஜாமணியை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.