வங்கியில் ரு.2 லட்சம் கடன் பெற்று மோசடி: மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கைது
சிதம்பரத்தில் வங்கி ரூ.2 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக மகளிர் சுயஉதவிக்குழுத் தலைவியை போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரத்தில் வங்கி ரூ.2 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக மகளிர் சுயஉதவிக்குழுத் தலைவியை போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரம் தாகம் தீர்த்த விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ஷீலா (48). இவர் கவிதா, மில்காசிபேகம், மற்றும் மஞ்சுளா உள்ளிட 20 பெண்களை உறுப்பினராக சேர்த்து மகளிர் சுயஉதவிக்குழுவை தொடங்கினார். குழுவிற்கு ஷீலா தலைவியாக இருந்துள்ளார். சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்காக தலா ரூ.10 ஆயிரம் வீதம் கடனாக வழங்க, கடந்த ஜூலை மாதம் ரு.2 லட்சத்தை கடனாக வங்கி மூலம் பெற்றுள்ளார். ஆனால் பணத்தை ஷீலா, கவிதா,மில்காசிபேகம் ஆகிய மூவரும் பிரித்து எடுத்து கொண்டு மற்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து மஞ்சுளா என்ற பெண் சிதம்பரத் நகர காவல் நிலையத்தில் புகாரின் அளித்தார். புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து மகளிர் சுயஉதவிக்குழு தலைவி ஷீலா கைது செய்யப்பட்டார். மேலும் கவிதா, மில்காசிபேகம் ஆகியோரை போலீஸார் தேடிவருகின்றனர்.