முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலை., ஆசிரியர் கூட்டமைப்பினர் அமைச்சருடன் சந்திப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் அதன் விளைவாக எடுக்கப்பட்ட ஆள்குறைப்பு, சம்பளக் குறைப்பு நடவடிக்கை தொடர்பாக ஏற்பட்டுள்ள விளைவுகள் ஆகியன

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் அதன் விளைவாக எடுக்கப்பட்ட ஆள்குறைப்பு, சம்பளக் குறைப்பு நடவடிக்கை தொடர்பாக ஏற்பட்டுள்ள விளைவுகள் ஆகியன குறித்து எடுத்துச் சொல்ல அமைச்சரைச் சந்தித்தனர் அப் பல்கலையின் கூட்டமைப்பினர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையின் ஆசிரியர் ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் இன்று காலை உயர்கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து, இந்தப் பிரச்னை பற்றி எடுத்துக் கூறினர். விரைவில் இதனால் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை அகல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.