டெங்கு காய்ச்சல் பாதிப்பு : கடலூர் சிறுவன் பலி
டெங்கு காய்ச்சல் பாதித்து புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சேர்ந்த சிறுவன் இன்று உயிரிழந்தான்.
டெங்கு காய்ச்சல் பாதித்து புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சேர்ந்த சிறுவன் இன்று உயிரிழந்தான்.
கடலூர் தேவனாம்பட்டினம் பெருமாள்கோயிலைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரது ஒன்றேகால் வயது குழந்தை ராகுல். இவனுக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று புதுச்சேரி மகாத்மாக காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ராகுல் உயிரிழந்தான்.
டெங்கு காய்ச்சல் பாதித்து ராகுல் உயிரிழந்ததை அடுத்து கடலூர் நகராட்சி ஊழியர்கள் தேவாணம்பட்டியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.