FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
படிப்புகள்

சென்னை கணிதவியல் கல்வி மையத்தில் நான்கு ஆண்டுகள் பிஎஸ் படிப்பு

சென்னை கணிதவியல் கல்வி மையத்தில் நான்கு ஆண்டுகள் பிஎஸ் படிப்பு

Updated On : 18 மார்ச் 2026, 11:48 am IST
சென்னை கணிதவியல் கல்வி மையம் - DPS
பகிர்:

சென்னை: சென்னை கணிதவியல் கல்வி மையத்தில், வரும் 2026 - 27ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கவிருக்கும் பிஎஸ் (ஹானர்ஸ்) நான்கு ஆண்டுகள் கணிதப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை கணிதவியல் கல்வி மையத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வரும் பிஎஸ்சி கணிதவியல் மூன்றாண்டு பட்டப்படிப்பை முடிக்கும் பட்டதாரி இளைஞர்கள் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் நல்ல வேலை வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள்.

ஆனால், கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வளாகத் தேர்வுகளின்போது, பங்கேற்கும் பெரிய நிறுவனங்கள் நான்கு ஆண்டு பட்டப்படிப்பையே கட்கிறார்கள். எனவே, வரும் கல்வியாண்டிலிருந்து பிஎஸ்சி படிப்பை 4 ஆண்டுகள் வழங்கும் பிஎஸ் படிப்பாக தரம் உயர்த்தியிருக்கிறோம்.

Advertisement

Advertisement

நான்காம் ஆண்டில், இணைப்புப் படிப்பாக மாணவர்கள் டேட்டா சயின்ஸ் பாடத்திலும் பட்டம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இப்படிப்பில் 50 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மே 2ஆம் தேதி நடக்கும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் சேர்க்கை கிடைக்கும். இங்கு பிஎஸ் முடித்தவர்கள் ஓராண்டில் முதுகலைப் பட்டமும் இங்கு படிக்கலாம்.

cmi.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 4. சென்னை, மதுரை உள்பட 30 மையங்களில் தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கு 4000 பேர் விண்ணப்பிப்பார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments