அண்ணாமலை பல்கலை ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
சென்னையில், பல்கலைக் கழக துணை வேந்தர் ராமநாதன், ஊழியர்களுக்கு அளித்த உறுதி மொழியில், சம்பளக் குறைப்பு மற்றும் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக பல்கலைக் கழக ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்கலைக் கழக நிதிநிலை குறித்து ஆராய 3 பேர் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் ஊழியர்களிடம் துணைவேந்தர் கூறியுள்ளார்.