கரூர் அருகே கார் மோதி கூலித் தொழிலாளி பெண்கள் இருவர் பலி
கரூர் அருகே கார் மோதிய விபத்தில் விவசாயக் கூலித் தொழிலாளி பெண்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர் அருகே கார் மோதிய விபத்தில் விவசாயக் கூலித் தொழிலாளி பெண்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூரை அடுத்த சின்னத்தாராபுரம் அருகில் நஞ்சைக்காளக்குறிச்சி என்ற இடத்தில் சாலை ஓரம் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் விவசாயக் கூலித் தொழிலாளிகளான முத்து லட்சுமி (36), துளசியம்மாள் (52) ஆகியோர். அப்போது, தாராபுரத்தில் இருந்து வந்த கார் ஒன்று சாலையோரத்தில் அமர்ந்திருந்த அவர்கள் இருவர் மீதும் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.