திண்டுக்கல்லில் இளைஞர் தீயிட்டு தற்கொலை
உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இளைஞர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாகப் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இளைஞர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாகப் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கன்னிவாடி காவல் சரகம் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த ராஜகோபாலின் மகன் சதீஸ்குமார்(21). இவர் இங்குள்ள நூல் மில்லில் வேலை பார்த்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த சதீஸ்குமார் கடந்த நவ.9ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றாராம். உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சனிக்கிழமை இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் கன்னிவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.