திண்டுக்கல்லில் வ.உ.சி. நினைவு தினம்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 76ஆவது தினம் கடைபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 76ஆவது தினம் கடைபிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சியையொட்டி திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள வ.உ.சியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மன்றத் தலைவர் ஆ.திருமலைசாமி, நகர் காங்கிரஸ் செயலாளர் க.செல்வராசு, காமராஜர் பேரவை ஒருங்கிணைப்பாளர் வா.ஞானகுரு, அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி இயக்கக தனி அலுவலர் கே.எம்.வெங்கடேசன், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பேச்சாளர் எம்.சி.எஸ்.தாஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். கூட்டத்திற்கான ஏற்பாட்டினை திண்டுக்கல் மாவட்ட காமராசர்-சிவாஜி தேசிய பேரவை நிறுவனர் சு.வைரவேல் செய்திருந்தார்.