மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள முத்து மேம்பாலம் பராமரிப்புப் பணிகள் காரணமாக போக்குவரத்து நிறுத்தப் பட்டு, மாற்றுப் பாதையில் போக்குவரத்து அனுமதிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், பாலத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்து, பாலம் போக்குவரத்துக்கு திறந்துவிடப் பட்டது.
இதனால், பெரியார் நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் போக்குவரத்து வழக்கம் போல் அனுமதிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
பாலத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் வரும் 25ம் தேதி தொடங்கும் என்றும் போலீஸார் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.