முகப்பு
தற்போதைய செய்திகள்

சேரன்மகாதேவி மலை கோயிலில் 24ம் தேதி கார்த்திகை தீப விழா

சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் வருகிற 27 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை தீப விழா நடைபெறுகிறது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் வருகிற 27 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை தீப விழா நடைபெறுகிறது.

சேரன்மகாதேவி களக்காடு பிரதான சாலையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கொழுந்துமாமலையில் அமைந்துள்ள இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழாவையொட்டி அன்றைய தினம் கோயிலில் மூலவர் பாலமுருகனுக்கு காலை 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை ஆகியன நடைபெறும். மாலை 6 மணிக்கு தீப பூஜையும் நடைபெறுகிறது. பக்தர்கள் வசதிக்காக செவ்வாய்க்கிழமை சேரன்மகாதேவி பஸ் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →