தற்கொலை செய்த இளம் பெண் உடலை எரித்த தந்தை உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தற்கொலை செய்து கொண்ட மகளின் சடலத்தை போலீஸூக்குத் தெரியாமல்
தற்போதைய செய்திகள்தற்கொலை செய்த இளம் பெண் உடலை எரித்த தந்தை உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தற்கொலை செய்து கொண்ட மகளின் சடலத்தை போலீஸூக்குத் தெரியாமல்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தற்கொலை செய்து கொண்ட மகளின் சடலத்தை போலீஸூக்குத் தெரியாமல் எரித்த தந்தை உள்ளிட்ட நால்வர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுரைக்காய்பட்டி, மேலத்தெருவைச் சேர்ந்த பால்கோனார் மகள் முனீஸ்வரி (17). இவருக்கும் இவரது சகோதரி கஸ்தூரிக்கும் செவ்வாய்கிழமை வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமுற்ற முனிஸ்வரி தனக்குத்தானே மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இவரது சடலத்தை போலீஸாருக்குத் தெரியாமல் தந்தை அ.பால்கோனார், வே.முருகன், கா.கணேசன், ரா.நாகராஜ் ஆகியோர் ஆயர்தர்மம், சிறுகுளம் கண்மாய்கரையில் உள்ள மயானத்தில் எரித்துவிட்டார்களாம்.
இது குறித்து இலந்தைக்குளம், கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி, நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் செய்தார். போலீஸார் தந்தை உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.