தற்போதைய செய்திகள்

சட்டத்துறையில் இந்திய மொழி: தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியுதவி

தினமணி

சட்டம் தொடர்பான துறைகளில் இந்திய மொழிகளைப் பயன்படுத்தும் தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், இந்திய அரசமைப்பில் சொல்லப்பட்டுள்ள மொழி எதிலும் புத்தகங்களை தயாரித்தல், வெளியிடுதல் போன்ற பணி எதனையும் புரிந்து வருகிற அமைப்புகளுக்கு மானியம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு, தகுதி வாய்ந்தவர்கள் www.lawmim.nic.in/olwing  என்ற இணையதளம் மூலமாகவும், இணைச் செயலாளர் மற்றும் சட்ட ஆலோசகர், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், சட்டமியற்றுத்துறை, ஆட்சி மொழிப் பிரிவு, புது தில்லி என்ற முகவரிக்கு அனுப்பியும், அக்டோபர் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்கள் அறிய 011-23386229  எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT