முகப்பு
தற்போதைய செய்திகள்

கர்நாடக முழு அடைப்பு: போராட்டக்காரர் மரணம்

மைசூரில் அமைந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர் கௌரண்ணா(45). இவர், சனிக்கிழமை இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பைக்கில் சென்ற ஊர்வலத்தில் கலந்துகொண்டு, காவிரி நீரை விட எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:09 PM
பகிர்:

மைசூரில் அமைந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர் கௌரண்ணா(45). இவர், சனிக்கிழமை இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பைக்கில் சென்ற ஊர்வலத்தில் கலந்துகொண்டு, காவிரி நீரை விட எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடும் ஆவேசமாக கோஷமிட்டபடி இருந்த கௌரண்ணா, மாரடைப்பால் மரணம் அடைந்தார். இது அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஒரு போராட்டக்காரர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ராமநகரம் மாவட்டம், ஹுன்சூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து பிளேடால் தனது கைகளை 8 இடங்களில் வெட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் உயிர்தப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.