காரைக்கால் அருகே நில உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை கேட்டபோது நில உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.
நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை கேட்டபோது நில உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது...
காரைக்கால் பிரெஞ்சு ஆசிரியர் வீதியை சேர்ந்தவர் ஆனந்தன் மனைவி கனகலட்சுமி. இவருக்கு சொந்தமான இடம் கீழகாசாக்குடி பகுதியில் உள்ளது. நிலத்தின் முன்பகுதியை வாடகைக்கு எடுத்து மூர்த்தி (31) என்பவர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் உணவகம் நடத்தி வந்துள்ளார். நீண்ட காலமாக அவர் உரிமையாளருக்கு கடை வாடகை தரப்படவில்லையென கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கனகலட்சுமி நீதிமன்றத்தில் மூர்த்தி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் உணவகத்தின் பின்புறமுள்ள குறிப்பிட்ட பகுதியை மூர்த்தி ஆக்கிரமித்து பயன்படுத்து வந்தாராம். இதுகுறித்து மூர்த்தியிடம் கனகலட்சுமி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தவாறு பேசினாராம். கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் கனகலட்சுமி புகார் செய்துள்ளார்.
புகாரை பதிவு செய்த போலீஸார் மூர்த்தியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெங்கடசாமி உத்தரவின் பேரில், ஆக்கிரமிப்பு செய்து விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியை போலீஸ் துணையுடன் அகற்றப்பட்டது.