முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவாரூரில் கல்லூரிப் பேருந்து கவிழ்ந்து 8 பேர் காயம்

திருவாரூரில் கல்லூரி பேருந்து ஓடம்போக்கி ஆற்றின் கரையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

தற்போதைய செய்திகள்

திருவாரூரில் கல்லூரிப் பேருந்து கவிழ்ந்து 8 பேர் காயம்

திருவாரூரில் கல்லூரி பேருந்து ஓடம்போக்கி ஆற்றின் கரையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:13 PM
பகிர்:

திருவாரூரில் கல்லூரி பேருந்து ஓடம்போக்கி ஆற்றின் கரையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து, இன்று காலை வழக்கம்போல் திருவாரூரில் மாணவ மாணவர்களை ஏற்றிக் கொண்டு, தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் சென்றது, காலை சுமார் 7.30 மணி அளவில் விளமல் பகுதியில் வந்தபோது, திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஓடம்போக்கி ஆற்றின் சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 6 மாணவர்கள் 2 விரிவுரையாளர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உடனே திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →