பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மாணவர்கள் மீது கார் மோதி 9 பேர் காயம்
பொள்ளாச்சி அருகே ஆலங்கடவு பகுதியில், இன்று காலை பள்ளி செல்ல பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுடன்
பொள்ளாச்சி அருகே ஆலங்கடவு பகுதியில், இன்று காலை பள்ளி செல்ல பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுடன் மாணவர்களும் காத்திருந்தனர். அப்போது, பொள்ளாச்சியில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற கார் ஒன்று வேகமாகச் சென்றது. அது, பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, நிலை தடுமாறி, மாணவர் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் கார் மோதி 9 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக பொள்ளாச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.