தற்போதைய செய்திகள்

நிலப்பிரச்னையில் தகராறு: அண்ணன் சுட்டு தம்பி படுகாயம்

நிலப் பிரச்னையில் அண்ணன் தம்பிக்குள்ளே ஏற்பட்ட தகராறில், அண்ணன் துப்பாக்கியால் சுட்டதில் தம்பி படுகாயம் அடைந்தார்.

கே. ராஜசேகரன்

நிலப் பிரச்னையில் அண்ணன் தம்பிக்குள்ளே ஏற்பட்ட தகராறில், அண்ணன் துப்பாக்கியால் சுட்டதில் தம்பி படுகாயம் அடைந்தார்.

சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த பூணாண்டியூரைச் சேர்ந்தவர் சம்பத். இவருக்கும் இவரின் தம்பி கருணாகரனுக்கும் நிலம் தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கருணாகரனை அங்கே திடீரென வந்த சம்பத் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் தோள்பட்டையில் படுகாயம் அடைந்த கருணாகரன் சேலம் மருத்துவமனையில் உடனடியாகச் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

SCROLL FOR NEXT