கரூர் அருகே கார்-லாரி மோதல்: 3 பேர் பலி
கரூர் அருகே காருடன் லாரி மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
கரூர் அருகே காருடன் லாரி மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
கோவையைச் சேர்ந்த மனோகரன் என்பவர் தனது குடும்பத்தாருடன் காரில் திருநள்ளாறு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இவர் பாரதியார் பல்கலையில் பணி செய்துவருகிறார். இவர்கள் சென்ற கார், கரூர் அருகே கரப்பாளையம் என்ற இடத்தில் சிமிண்ட் லாரியுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், மனோகரன் இவரது மனைவி வைரகாந்தி மற்றும் உறவினர் பாலசுப்பிரமணியன் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். மனோகரனின் மகன்கள் கண்ணன், ராகுல் இருவரும் பலத்த காயமடைந்து கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.