முகப்பு
தற்போதைய செய்திகள்

விக்கிரமசிங்கபுரத்தில் பாஜக மறியல்: 66 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளநிலத்தை மீட்க வலியுறுத்தி

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:23 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள
நிலத்தை மீட்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியினர் 10
பெண்கள் உள்பட 66 பேர் கைது செய்யப்பட்டனர்.

விக்கிரமசிங்கபுரத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியார் பள்ளி
நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இந்த நிலத்தை மீட்க வலியுறுத்தி
பாரதீய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி சார்பில் திங்கள்கிழமை
விக்கிரமசிங்கபுரம் அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் மறியல் போராட்டம்
நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்திற்கு கட்சியின் சிறுபான்மை அணி மாவட்டத் தலைவர்
இருதயராஜ் தலைமை வகி்த்தார். சிறுபான்மை அணியின் மாநில துணைத் தலைவர்
முனவரிபேகம், கட்சியின் அறநிலையபிரிவு மாநிலத் தலைவர் சிதம்பரம்,
கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் எஸ்.வி. அன்புராஜ், சிறுபான்மை அணி
மாநிலத் துணைத் தலைவர் இரா. சைமன் மற்றும் 10 பெண்கள் உள்பட 66 பேரை
போலீஸார் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →