ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்த ஏழை மாணவர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர், செப்., 05 : ஸ்ரீவில்லிபுத்தூர் நரையன்குளம் - ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தையொட்டி, தங்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து
ஸ்ரீவில்லிபுத்தூர், செப்., 05 : ஸ்ரீவில்லிபுத்தூர் நரையன்குளம் - ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தையொட்டி, தங்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசு வழங்கி ஏழை மாணவ, மாணவிகள் கௌரவித்துள்ளனர்.
தாழ்த்தப்பட்ட ஏழை மாணவ, மாணவியர் மட்டும் பயிலும் இந்த பள்ளியில், மாணவ, மாணவிகள் பெற்றோர் தங்களுக்குக் கொடுக்கும் சிறிய அளவிலான பணத்தை சேமித்து வைத்து அதன் மூலம் ஆசிரியர்களுக்கு பரிசு பொருள் வாங்கியிருப்பது குறித்து விழாவில் கலந்து கொண்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயராஜ் கந்தசாமி பேசுகையில், மாணவ, மாணவிகள் அளித்த பரிசுகளைப் பெற்ற ஆசிரியர்களுக்கு, இன்று தேசிய விருது கிடைத்த அளவுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அளித்த அறிவைப் பெற்று நாம் எதிர்காலத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும் அதனால் ஆசிரியர்களுக்கு எந்த பலனும் இல்லை. அவர்கள் ஏணி போல நம்மை முன்னேற்றுகிறார்கள். எனவே, ஆசிரியர்களை நாம் எப்போதும் போற்றி மதிக்க வேண்டும் என்று கூறினார்.
Advertisement