நிலத்தை அளக்க லஞ்சம்: சர்வேயர், வி.ஏ.ஓ. கைது
விருதுநகர், செப்.7: விவசாயியின் நிலத்தை அளக்க லஞ்சம் கேட்ட சர்வேயர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே மேலக்குளத்தைச் சேர்ந்த வி
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:19 AM
விருதுநகர், செப்.7: விவசாயியின் நிலத்தை அளக்க லஞ்சம் கேட்ட சர்வேயர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே மேலக்குளத்தைச் சேர்ந்த விவசாயி மொந்தஅம்பலம்(50).
இவர் தன்னுடைய நிலத்தை அளக்க மனு கொடுத்திருந்தார். அதற்கு, ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர் சர்வேயர் தர்மராஜ் மற்றும் மொசக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பூமி ஆகியோர்.
இது குறித்து அறிந்த விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், அவர்கள் இருவரும் ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது, அவர்களைக் கைது செய்தனர்.