கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர், செப்., 17 : சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழாவில், வழக்குரைஞர்களுக்கான சேம நல நிதியை ரூ.5.25 லட்சமாக முதல்வர் ஜெயலலிதா உயர்த்தி வழங்கி அறிவித்தார். அதன் பின்னர் அதற்கு எத
ஸ்ரீவில்லிபுத்தூர், செப்., 17 : சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழாவில், வழக்குரைஞர்களுக்கான சேம நல நிதியை ரூ.5.25 லட்சமாக முதல்வர் ஜெயலலிதா உயர்த்தி வழங்கி அறிவித்தார். அதன் பின்னர் அதற்கு எதிராக திமுக தலைவர் கருணாநிதி, தனது ஆட்சி காலத்திலேயே இந்த தொகை உயர்த்தி வழங்கப்பட்டதாகக் கூறி, குடியரசுத் தலைவர், முதல்வர், தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியதற்கு வழக்குரைஞர்கள் சார்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்ட அதிமுக பிரிவு வழக்குரைஞர்களின் துணை மேலாளர் சுரேஷ் நெப்போலியன் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு திமுக தலைவர் கருணாநிதியின் உருவ பொம்மையை வழக்குரைஞர்கள் சாலையில் போட்டு எரித்தனர். அப்போது அதிமுக வழக்குரைஞர்கள் முருகன், ஆணழகன உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.