ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று கடையடைப்பு
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த மார்ச் மாதம், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விஷ வாயு கசிந்ததை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தூத்துக்குடி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. முக்கிய சந்தைப் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.