தற்போதைய செய்திகள்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையானின் தரிசன நேரம் மாற்றம்

இம்மாதம் 25ம் தேதி நடைப்பெற உள்ள சந்திரகிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையானின் தரிசன நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ தெரிவித்தார்.

சி. சுரேஷ்குமார்

இம்மாதம் 25ம் தேதி நடைப்பெற உள்ள சந்திரகிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையானின் தரிசன நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ தெரிவித்தார்.

சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு திருமலை ஏழுமலையானுக்கு 3 நாட்கள் வருடாந்திர வசந்தோற்சவம் நடைப்பெறுவது வழக்கம். 25ம் தேதி வியாழக்கிழமை பௌர்ணமி அன்று கடைசி நாள் வசந்தோற்சவ விழா என்பதால் அன்றைய தினத்தில் காலை மற்றும் ஈவ்னிங் பிரேக் தரிசனமும், 300ரூ விரைவு தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.

50ரூ சுதர்ஸன டிக்கெட்கள் முன் பதிவு செய்த 6,800 பேர் மட்டும் அன்றைய தினம் காலை 10 மணிக்குள்ளாக தரிசனத்திற்கு கோவிலுக்குள் வந்துவிட வேண்டும் என்று கூறினார். தர்ம தரிசனம் மற்றும் அனைத்து வகையான தரிசனங்களும் மதியம் 1.30 மணிக்கே முடிக்கப்படும்.

அந்நாள் வியாழக்கிழமை ஆனதால் மதியம் 3 மணிக்கு மஹா சுத்தி செய்து பூலங்கி சேவையை சார்த்திய பின் கோவில் மூடப்படும். பிறகு மறுநாள் 26ம் தேதி வெள்ளிக்கிழமை காலை சுப்ரபாத சேவைக்கு கோவில் திறக்கப்படும் என்று கூறினார். பக்தர்கள் இந்நேர மாற்றத்திற்கு தக்கபடி ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும்படி வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT