கடையநல்லூர் இரட்டைக் கொலை: காயமடைந்த 3வது நபரும் சாவு
கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி காவல் நிலையத்துக்குச் சென்று கையெழுத்து போட்டுவிட்டு வந்து கொண்டிருந்த கனி, குமார் ஆகியோர் சிலரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இதில் தொடர்புடைய
கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி காவல் நிலையத்துக்குச் சென்று கையெழுத்து போட்டுவிட்டு வந்து கொண்டிருந்த கனி, குமார் ஆகியோர் சிலரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இதில் தொடர்புடைய 9 பேர் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்த செல்லத்துரை என்ற நபரும் இன்று உயிரிழந்தார். அவர் திருநெல்வெல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆனது.