முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் பகுதியில் கூடுதலாக ஒரு மணி நேரம் மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

சிதம்பரம் 110/33-11 கி.வோ துணை மின் நிலையத்தில் உள்ள 10 எம்விஏ திறன் மின் மாற்றியினை திறனை உயர்த்தும் வகையில் புதிய 16 எம்விஏ திறன் உள்ள

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:22 AM
பகிர்:

சிதம்பரம் பகுதியில் இன்று முதல் கூடுதலாக ஒரு மணி நேரம் மின்தடை செய்யப்படும் என சிதம்பரம் கிளை மின்வாரிய செயற்பொறியாளர் ச.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்: சிதம்பரம் 110/33-11 கி.வோ துணை மின் நிலையத்தில் உள்ள 10 எம்விஏ திறன் மின் மாற்றியினை திறனை உயர்த்தும் வகையில் புதிய 16 எம்விஏ திறன் உள்ள மின்மாற்றி பொருத்தும் பணி நடைபெற்று வருவதால் இன்று முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு மாலை நேரங்களில் தற்போது உள்ள மின்தடையுடன் கூடுதலாக ஒரு மணி நேரம் கீழ் கண்ட பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படும்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்: சிதம்பரம் நகரம், அம்மாப்பேட்டை, மாரியப்பாநகர், வண்டிகேட், சி.முட்லூர், கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, அண்ணாமலைநகர், மணலூர், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம், கிள்ளை, பின்னத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கடும் வெய்யில், கடும் மின்வெட்டு, மக்கள் கடும் அவதி!

சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து 12 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு செய்யப்படுகிறது. வசதி படைத்தவர்கள் இன்வெர்ட்டர் பொருத்தியுள்ளதால் மின்வெட்டினால் பாதிப்பு இல்லாமல் உள்ளனர். ஆனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் கடும் வெய்யிலினாலும், அதிகளவு நேரம் மின்வெட்டினாலும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது செய்யப்பட்ட மின்வெட்டுடன் தற்போது மேலும் ஒரு மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதால் பொதுமக்கள் மேலும் பாதிப்பிற்குள்ளாவார்கள். மின்வெட்டினால் சிதம்பரம் பகுதியில் ஐஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐஸ் போட்ட குளிர்பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →